ஹதீஸ்கள்
#2510
ஸஹீஹ் அல்-புகாரீ - Mortgaging
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(கொடிய குற்றவாளியான) கஅப் பின் அல்அஷ்ரஃபைக் வீழ்த்து வதற்கு யார் (தயாராக) இருக்கிறார்கள்? ஏனெனில், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அவன் தொல்லை கொடுத்து விட்டான்” என்று கூறினார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்கள். (பிறகு) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, ‘‘ஒரு யிவஸ்க்’ அல்லது இரண்டு யிவஸ்க்’கள் (உணவுப் பொருளைக்) கடனாக எங்களுக்கு நீ தரவேண்டும் என்று விரும்புகிறோம்” எனக் கூறினார். அதற்கு அவன், ‘‘உங்கள் பெண்களை என்னிடம் அடகுவையுங்கள்” என்று கூறினான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நீயோ அரபியரிலேயே அழகு மிக்கவன். உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை நாங்கள் அடகுவைக்க முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘‘உங்கள் குழந்தைகளை என்னிடம் அடகுவையுங்கள்” என்று கேட்டான். அதற்கு அவர், ‘‘நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளை அடகுவைக்க முடியும்? (அப்படி அடகுவைத்தால்) யிஓரிரண்டு யிவஸ்க்’களுக்காக அடகுவைக்கப் பட்டவன்தானே இவன்’ என்று அவர்களை மற்றவர்கள் (இழிவாகப் பேசிப் பரிகாசமாக) ஏசுவார்களே! இது எங்களுக்கு அவமான மல்லவா? ஆயினும், நாங்கள் உன்னிடம் எங்கள் ஆயுதங்களை அடகுவைக்கி றோம்” என்று கூறினார்கள். (அவனும் அதற்குச் சம்மதிக்க) பின்னர் வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். (பிறகு ஆயுதத்துடன் வந்து அதை அடகுவைக்கின்ற சாக்கில்) அவனைக் கொன்றுவிட்டார்கள்; பிறகு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து செய்தியைத் தெரிவித்தார்கள்.4 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Mortgaging
- Hadith Index
- #2510
- Book Index
- 3
Grades
- -