ஹதீஸ்கள்
#2508
ஸஹீஹ் அல்-புகாரீ - Mortgaging
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது போர்க் கவசத்தை தொலி நீக்கப் படாத கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். ‘‘முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டுக்காரர்களாக இருந்தும்கூட ஒரேயொரு ‘ஸாஉ’ (தானியம் அல்லது பேரீச்சம்பழம்) தவிர வேறெதுவும் காலையிலோ மாலையிலோ இருந்ததில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.3 அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا هشام، حدثنا قتادة، عن انس رضى الله عنه قال ولقد رهن النبي صلى الله عليه وسلم درعه بشعير، ومشيت الى النبي صلى الله عليه وسلم بخبز شعير واهالة سنخة، ولقد سمعته يقول " ما اصبح لال محمد صلى الله عليه وسلم الا صاع، ولا امسى ". وانهم لتسعة ابيات
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Mortgaging
- Hadith Index
- #2508
- Book Index
- 1
Grades
- -
