ஹதீஸ்கள்
#2491
ஸஹீஹ் அல்-புகாரீ - Partnership
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடிமையில் தமக்குரிய பங்கை விடுதலை செய்பவரிடம், அந்த அடிமை யின் நியாயமான (முழு) விலையையும் எட்டுகின்ற (தொகையான)து இருந்தால், அவனை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையெனில், எந்த அளவுக்கு அவர் விடுதலை செய்தாரோ அந்த (தமது பங்கின்) அளவுக்கு மட்டுமே அவனை விடுதலை செய்தவர் ஆவார்.7 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் மாணவர் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து இதை அறிவித்த அய்யூப் (ரஹ்) அவர்கள், ‘‘இல்லையெனில், எந்த அளவுக்கு அவர் விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கு மட்டுமே அவனை விடுதலை செய்தவர் ஆவார் எனும் வாசகம் நாஃபிஉ (ரஹ்) அவர்களின் சொல்லா; அல்லது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸின் ஒரு பகுதியா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا عمران بن ميسرة، حدثنا عبد الوارث، حدثنا ايوب، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " من اعتق شقصا له من عبد او شركا او قال نصيبا وكان له ما يبلغ ثمنه بقيمة العدل، فهو عتيق، والا فقد عتق منه ما عتق ". قال لا ادري قوله عتق منه ما عتق. قول من نافع او في الحديث عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Partnership
- Hadith Index
- #2491
- Book Index
- 9
Grades
- -
