ஹதீஸ்கள்
#2481
ஸஹீஹ் அல்-புகாரீ - Oppressions
அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) இருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அவர் (ஆயிஷா) அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி தட்டை உடைத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்), ‘‘உண்ணுங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும்வரை தட்டையும் அதைக் கொண்டுவந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்தி வைத்தார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக்கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து (அனுப்பி) விட்டார்கள்.22 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى بن سعيد، عن حميد، عن انس رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم كان عند بعض نسايه، فارسلت احدى امهات المومنين مع خادم بقصعة فيها طعام فضربت بيدها، فكسرت القصعة، فضمها، وجعل فيها الطعام وقال " كلوا ". وحبس الرسول والقصعة حتى فرغوا، فدفع القصعة الصحيحة وحبس المكسورة. وقال ابن ابي مريم اخبرنا يحيى بن ايوب، حدثنا حميد، حدثنا انس، عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oppressions
- Hadith Index
- #2481
- Book Index
- 42
Grades
- -
