ஹதீஸ்கள்
#2477
ஸஹீஹ் அல்-புகாரீ - Oppressions
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், கைபர் போரின்போது நெருப்பு ஒன்று மூட்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது ‘‘எதற்காக இந்த நெருப்பு மூட்டப்படுகின்றது?” என்று கேட்டார்கள். ‘‘நாட்டுக் கழுதை இறைச்சியைச் சமைப்ப தற்காக” என்று மக்கள் பதிலளித்தார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘பானைகளை உடைத்து அவற்றிலுள்ள (இறைச்சி, உணவு ஆகிய)வற்றைக் கொட்டிவிடுங்கள்” என்று உத்தரவிட் டார்கள். மக்கள், ‘‘இறைச்சிகளைக் கொட்டி விட்டு, பாத்திரங்களைக் கழுவிக்கொள்ள லாமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அவ்வாறே) கழுவிக்கொள் ளுங்கள்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (என் ஆசிரியர்) இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்கள், (யிநாட்டுக் கழுதை’ என்பதைக் குறிக்க ‘அல்ஹுமுருல் இன்சிய்யா’ என்பதற்குப் பதிலாக) ‘அல் ஹுமுருல் அனசிய்யா’ என்று குறிப் பிடுவார்கள். (பொருள் ஒன்றே; யிகாட்டுக் கழுதை’க்கு எதிர்ச்சொல்.) அத்தியாயம் :
حدثنا ابو عاصم الضحاك بن مخلد، عن يزيد بن ابي عبيد، عن سلمة بن الاكوع رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم راى نيرانا توقد يوم خيبر. قال " على ما توقد هذه النيران ". قالوا على الحمر الانسية. قال " اكسروها، واهرقوها ". قالوا الا نهريقها ونغسلها قال " اغسلوا ". قال ابو عبد الله كان ابن ابي اويس يقول الحمر الانسية بنصب الالف والنون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oppressions
- Hadith Index
- #2477
- Book Index
- 38
Grades
- -
