ஹதீஸ்கள்
#2475
ஸஹீஹ் அல்-புகாரீ - Oppressions
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விபசாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு அதைச் செய்யமாட்டான். (மது அருந்து பவன் மது அருந்தும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். (மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொள்ளையடிக்கமாட்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு அறிவிப்புகளில் கொள்ளையடிப்பது தொடர்பான குறிப்பு இல்லை. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின் றேன்: இவற்றைச் செய்யும்போது இறை நம்பிக்கை(யின் ஒளி) அவனிடமிருந்து அகற்றப்படுகிறது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oppressions
- Hadith Index
- #2475
- Book Index
- 36
Grades
- -