ஹதீஸ்கள்
#2445
ஸஹீஹ் அல்-புகாரீ - Oppressions
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளை யிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். (கட்டளையிடப்பட்ட) அவையாவன: 1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மியவருக்கு அவர், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’) என்று சொன்னால், யியர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பதிலளிப்பது. 4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது. 6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்வது. 7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.2 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oppressions
- Hadith Index
- #2445
- Book Index
- 6
Grades
- -