ஹதீஸ்கள்
#2439
ஸஹீஹ் அல்-புகாரீ - Lost Things Picked up by Someone (Luqatah)
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நடந்து சென்றுகொண்டிருந்தேன். என் முன்னே ஆடு மேய்ப்பவன் ஒருவனைக் கண்டேன். அவன் தன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனிடம் நான், ‘‘நீ யாருடைய பணியாள்?” என்று கேட்டேன். அவன், ‘‘குறைஷியரில் இன்ன மனிதருடைய பணியாள்” என்று சொல்லி அவரது பெயரைக் கூறினான். நான் அந்த மனிதரை அடையாளம் புரிந்து கொண்டேன். அவனிடம் நான், ‘‘உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா?” என்று கேட்டேன். அவன், ”ஆம்; (இருக்கிறது)” என்று பதிலளித்தான். எனக்காக நீ பால் கறந்து கொடுப்பாயா? என்று கேட்டேன். அவன் சரி என்றான். நான் (பால் கறந்து கொடுக்கும்படி) அவனுக்கு உத்தரவிட்டேன். அவன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்து அதன் தொடைகளுக்கிடையே காலை வைத்து அழுத்திக்கொண்டான். (பால் கறக்கத் தயாரானான்.) பிறகு நான், ஆட்டின் மடியை (அதில் படிந்திருக்கும்) புழுதி போக உதறும்படி கட்டளையிட்டேன். பிறகு அவன் தன் இரு கைகளையும் (தூய்மைப்படுத்திக்கொள்வதற்காக) உதறும்படிக் கட்டளையிட்டேன். ...றறஇப்படி உதறும்படி” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு கையை மற்றொரு கைமீது அடித்துக் காட்டினார்கள்... (அவ்வாறே, அவனும் கைகளைத் தூய்மைப்படுத்திக்கொண் டான்.) பிறகு சிறிதளவு பால் கறந்தான். நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு தோல் பாத்திரத்தை எடுத்து, அதில் பாலை ஊற்றி அதன் வாயை ஒரு துண்டுத் துணியால் மூடினேன். பிறகு அதன் (பால் பாத்திரத்தின்) அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை அதன் மீது தண்ணீர் ஊற்றினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அருந்துங்கள்” என்று கூறினேன். நான் திருப்தியடையும்வரை (அதை) அவர்கள் அருந்தி னார்கள்.10 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا النضر، اخبرنا اسراييل، عن ابي اسحاق، قال اخبرني البراء، عن ابي بكر رضى الله عنهما . حدثنا عبد الله بن رجاء، حدثنا اسراييل، عن ابي اسحاق، عن البراء، عن ابي بكر رضى الله عنهما قال انطلقت، فاذا انا براعي غنم يسوق غنمه فقلت لمن انت قال لرجل من قريش. فسماه فعرفته. فقلت هل في غنمك من لبن فقال نعم. فقلت هل انت حالب لي قال نعم. فامرته فاعتقل شاة من غنمه، ثم امرته ان ينفض ضرعها من الغبار، ثم امرته ان ينفض كفيه، فقال هكذا ضرب احدى كفيه بالاخرى فحلب كثبة من لبن وقد جعلت لرسول الله صلى الله عليه وسلم اداوة على فمها خرقة، فصببت على اللبن، حتى برد اسفله، فانتهيت الى النبي صلى الله عليه وسلم فقلت اشرب يا رسول الله. فشرب حتى رضيت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Lost Things Picked up by Someone (Luqatah)
- Hadith Index
- #2439
- Book Index
- 15
Grades
- -
