ஹதீஸ்கள்
#2436
ஸஹீஹ் அல்-புகாரீ - Lost Things Picked up by Someone (Luqatah)
ஸைத் பின் காலித் அல்ஜுஹனி (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைப் பற்றி ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. பிறகு, அதன் முடிச்சையும் பை(உறை)யையும் அடையாளம் தெரிந்து வைத்துக்கொள். பிறகு அதைச் செலவழித் துக் கொள். அதன் உரிமையாளர் வந்து (சரியான) அடையாளம் கூறிவிட்டால் அதை அவரிடம் திருப்பிச் செலுத்திவிடு” என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை எடுத்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க் குரியது” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதைச் செவியுற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் கன்னங் கள் இரண்டும் சிவந்துவிட்டன; லிஅல்லது அவர்களின் முகம் சிவந்து விட்டது.லி பிறகு ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதன் உரிமையாளர் அதைச் சந்திக்கும்வரை (தன்னைப் பசியிலிருந்தும் தாகத்தி லிருந்தும் பாதுகாத்துக்கொள்ள) அதனுடன் அதன் குளம்பும் தண்ணீர்ப் பையும் இருக்கிறதே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Lost Things Picked up by Someone (Luqatah)
- Hadith Index
- #2436
- Book Index
- 11
Grades
- -