ஹதீஸ்கள்
#2427
ஸஹீஹ் அல்-புகாரீ - Lost Things Picked up by Someone (Luqatah)
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராம வாசி வந்து, (பாதையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச்செய். பிறகு, அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சை யும் அடையாளம் பார்த்து வைத்துக்கொள். அதைப் பற்றி (அடையாளம்) தெரிவிப்ப வர் எவராவது உன்னிடம் வந்தால் (அவரிடம் ஒப்படைத்துவிடு.) இல்லை யென்றால், அதை உன் செலவுக்கு எடுத்துக்கொள்” என்று கூறினார்கள். அந்தக் கிராமவாசி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து)விட்ட ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று கூறினார்கள்.2 அந்தக் கிராமவாசி, ‘‘வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்களின் முகம் (வெறுப்பால் மங்கலாகி) நிறம் மாறிவிட்டது. பிறகு, ‘‘உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடன் அதன் குளம்பும் அதன் தண்ணீர்ப் பையும் உள்ளதே! நீர்நிலைகளுக்கு அது செல்கிறது; மரத்திலிருந்து தின்கிறது” என்று கூறினார்கள்.3 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Lost Things Picked up by Someone (Luqatah)
- Hadith Index
- #2427
- Book Index
- 2
Grades
- -