ஹதீஸ்கள்
#2410
ஸஹீஹ் அல்-புகாரீ - Litigation
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதை நான் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.2 ‘‘நபி (ஸல்) அவர்கள், யிவேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்துவிட்டனர்’ என்று கூறியதாக எண்ணுகிறேன்” என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، قال عبد الملك بن ميسرة اخبرني قال سمعت النزال، سمعت عبد الله، يقول سمعت رجلا، قرا اية سمعت من النبي، صلى الله عليه وسلم خلافها، فاخذت بيده، فاتيت به رسول الله صلى الله عليه وسلم فقال " كلاكما محسن ". قال شعبة اظنه قال " لا تختلفوا فان من كان قبلكم اختلفوا فهلكوا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Litigation
- Hadith Index
- #2410
- Book Index
- 1
Grades
- -
