ஹதீஸ்கள்
#2399
ஸஹீஹ் அல்-புகாரீ - Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் எவராயினும் அவருக்கு இந்த உலகிலும் மறுவுலகிலும் நானே மிக நெருக்கமான (உரிமையுடைய) வன் ஆவேன். நீங்கள் விரும்பினால், யிதிண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைவிட நபிதான் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார்’ (33:6) எனும் இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். ஓர் இறைநம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி) மரணித்து ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தைவழி உறவினர்கள் லி அவர்கள் எவ்வகையினராயினும் சரிலி அதற்கு வாரிசுகளாகட்டும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச் செல்கிறாரோ அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கிறாரோ அவர் என்னிடத்தில் வரட்டும். நானே அவர்களுக்குக் காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.5 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
- Hadith Index
- #2399
- Book Index
- 15
Grades
- -