ஹதீஸ்கள்
#2392
ஸஹீஹ் அல்-புகாரீ - Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கடனாகப் பெற்றிருந்த ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்க வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘‘அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அதற்குத் தோழர்கள், ‘‘அவருக்கு நீங்கள் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது” என்று கூறினர். இதைக் கேட்ட அம்மனிதர், ‘‘(என் உரிமையை) நிறைவாக எனக்கு நீங்கள் அளித்தீர்கள் என்றால், அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பான்” என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவருக்கு (வயது அதிகமான) அந்த ஒட்டகத்தையே கொடுத்துவிடுங்கள். ஏனெனில், எவர் (தாம் வாங்கிய கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்து கிறாரோ, அவரே மக்களில் சிறந்தவர் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، عن يحيى، عن سفيان، قال حدثني سلمة بن كهيل، عن ابي سلمة، عن ابي هريرة رضى الله عنه ان رجلا، اتى النبي صلى الله عليه وسلم يتقاضاه بعيرا، فقال رسول الله صلى الله عليه وسلم " اعطوه ". فقالوا ما نجد الا سنا افضل من سنه. فقال الرجل اوفيتني اوفاك الله. فقال رسول الله صلى الله عليه وسلم " اعطوه فان من خيار الناس احسنهم قضاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
- Hadith Index
- #2392
- Book Index
- 8
Grades
- -
