ஹதீஸ்கள்
#2391
ஸஹீஹ் அல்-புகாரீ - Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒரு மனிதர் மரணித்துவிட்டார். அவரிடம் (அடக்கத் தலத்தில் வைத்து), ‘‘நீ (உலகில்) என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து)வந்தாய்?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து)வந்தேன்” என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே ஹதீஸை நபி (ஸல்) அவர்களி டம் தாம் கேட்டதாக அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم، حدثنا شعبة، عن عبد الملك، عن ربعي، عن حذيفة رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " مات رجل، فقيل له قال كنت ابايع الناس، فاتجوز عن الموسر، واخفف عن المعسر، فغفر له ". قال ابو مسعود سمعته من النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
- Hadith Index
- #2391
- Book Index
- 7
Grades
- -
