ஹதீஸ்கள்
#2390
ஸஹீஹ் அல்-புகாரீ - Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களுக்குத் தாம் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி,) ‘‘(அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டுவிடுங்கள். ஏனெனில், கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு) பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். நபித்தோழர்கள், ‘‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களுக்குக் கிடைக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، اخبرنا سلمة بن كهيل، قال سمعت ابا سلمة، ببيتنا يحدث عن ابي هريرة رضى الله عنه ان رجلا، تقاضى رسول الله صلى الله عليه وسلم، فاغلظ له، فهم اصحابه، فقال " دعوه، فان لصاحب الحق مقالا. واشتروا له بعيرا، فاعطوه اياه ". وقالوا لا نجد الا افضل من سنه. قال " اشتروه فاعطوه اياه، فان خيركم احسنكم قضاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
- Hadith Index
- #2390
- Book Index
- 6
Grades
- -
