ஹதீஸ்கள்
#2377
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு, பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக வழங்கிட அவர்களை அழைத்தார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! அப்படி நீங்கள் (எங்களுக்கு) வருவாய் மானியம் வழங்குவதாயிருந் தால் எங்களுடைய குறைஷி சகோதரர்களுக்கும் அதே போன்று எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார்கள். ஆனால், (அனைவருக்கும் வருவாய் மானியம் தருகின்ற அளவுக்கு) மானிய நிலங்கள் அப்போது நபி (ஸல்) அவர்களி டம் இருக்கவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்குப் பின்னால் (சிறிது காலத்திற்குள்ளாகவே ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிட மற்றவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படுவதை நீங்கள் பார்ப்பீர் கள். ஆகவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும்வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்” என்று (அன்சாரிகளி டம்) கூறினார்கள்.16 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2377
- Book Index
- 25
Grades
- -