ஹதீஸ்கள்
#2317
ஸஹீஹ் அல்-புகாரீ - Representation, Authorization, Business by Proxy
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி (பலி) கொடுப்பதற்காக அனுப்பிவைத்த ஒட்டகங்களின் அடையாள மாலைகளை என் கைகளா லேயே நான் திரித்(துத் தயாரித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் கைகளால் அவற்றை (ஒட்டகங்களின் கழுத்தில்) தொங்கவிட்டார்கள். பிறகு அவற்றை என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்) உடன் (பலியிடுவதற்காக) அனுப்பினார்கள். (மக்காவில்) பலிப்பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்த எதுவும் அவர்கள்மீது விலக்கப்படவில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Representation, Authorization, Business by Proxy
- Hadith Index
- #2317
- Book Index
- 16
Grades
- -