ஹதீஸ்கள்
#2313
ஸஹீஹ் அல்-புகாரீ - Representation, Authorization, Business by Proxy
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் செய்த அறக்கொடை தொடர்பாக அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறும்போது, ‘‘இதன் பொறுப்பாளர், செல்வத்தைக் கையாடல் செய்யாமல் தாம் உண்பதும் தம் தோழருக்கு உண்ணக்கொடுப்பதும் தவறில்லை” என்று (குறிப்பிடப்பட்டிருந்ததாகத்) தெரிவித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் செய்த அறக் கொடைக்கு (அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ்) இப்னு உமர் (ரலி) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். மக்காவில் அவர்கள் வழக்கமாக யாரிடம் தங்குவார்களோ அவர்களுக்கு அதிலிருந்து அன்பளிப்பு வழங்குவார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Representation, Authorization, Business by Proxy
- Hadith Index
- #2313
- Book Index
- 13
Grades
- -