ஹதீஸ்கள்
#2301
ஸஹீஹ் அல்-புகாரீ - Representation, Authorization, Business by Proxy
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவிலுள்ள என் குடும்பத்தாரை யும் சொத்துகளையும் உமய்யா பின் கலஃப் (என்ற இறைமறுப்பாளர்) பாதுகாக்க வேண்டும் என்றும் மதீனாவிலுள்ள அவருடைய குடும்பத்தாரையும் சொத்து களையும் நான் பாதுகாப்பேன் என்றும் அவருடன் எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் செய்துகொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) ‘அப்துர் ரஹ்மான்’ (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, ‘‘ரஹ்மானை நான் அறியமாட்டேன்; அறியாமைக் காலத்தில் இருந்த உமது பெயரை எழுதும்” என்று அவர் கூறினார். நான் அப்து அம்ர் என்று (என் பழைய பெயரை) எழுதினேன். பத்ர் போர் நடந்த நாளில் மக்களெல் லாரும் உறங்கியபோது அவரைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி நான் சென்றேன். அவரை பிலால் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டார். பிலால் உடனே வந்து அன்சாரிகள் குழுமியிருந்த இடத்தில், ‘‘இதோ உமய்யா பின் கலஃப்! இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது” எனக் கூறினார்.2 பிலாலுடன் அன்சாரிகளில் ஒரு குழுவினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்துவிடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்னிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்சாரிகள் கொன்றுவிட்டனர். பிறகும் விடாமல் எங்களைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவராக இருந்தார். (அதனால் ஓட இயலவில்லை.) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், ‘குப்புறப் படுப்பீராக!’ என்று கூறினேன். அவர் குப்புற விழுந்ததும் அவரைக் காப்பாற்றுவதற்காக அவர்மேல் நான் விழுந்தேன். அன்சாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவரைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தமது வாளால் வெட்டினார். ‘‘அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், தமது பாதத்தின் மேல்பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்குக் காட்டினார்” என்று அவருடைய மகன் கூறுகிறார்.3 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Representation, Authorization, Business by Proxy
- Hadith Index
- #2301
- Book Index
- 3
Grades
- -