ஹதீஸ்கள்
#2107
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்தைவிட்டுப்) பிரியாத வரை தமது வியாபாரத்தில் (ஒரு முடிவு எடுக்க) உரிமை பெற்றிருக்கிறார்கள்; (முன்நிபந் தனை) உரிமை அளிக்கப்பட்ட வியாபார மாக இருந்தால் தவிர! (அப்போது முன் நிபந்தனையின்படி நடந்துகொள்ளலாம்.) இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘‘இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு விருப்பமான ஒரு பொருளை விலைக்கு வாங்கி(ட எண்ணி)னால், (அதை உறுதி செய்யும் வகையில்) விற்றவரைப் பிரி(ந்து சிறிது தூரம் நடந்துவிட்டு வரு)வார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறி யுள்ளார்கள்.28 அத்தியாயம் :
حدثنا صدقة، اخبرنا عبد الوهاب، قال سمعت يحيى، قال سمعت نافعا، عن ابن عمر، رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " ان المتبايعين بالخيار في بيعهما، ما لم يتفرقا، او يكون البيع خيارا ". قال نافع وكان ابن عمر اذا اشترى شييا يعجبه فارق صاحبه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2107
- Book Index
- 60
Grades
- -
