ஹதீஸ்கள்
#2045
ஸஹீஹ் அல்-புகாரீ - Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பது பற்றிக் குறிப்பிட்டார் கள். அவர்களிடம் நான் (பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்க) அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளித்தார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கோரினார். அவ்வாறே செய்தேன். இதைக் கண்ட ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் ஒரு கூடாரம் கட்ட உத்தரவிட்டார். அவ்வாறே கட்டப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் தமது கூடாரத்திற்குச் சென்றார்கள். அப்போது பல கூடாரங்களைக் கண்டு ‘‘இவை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், ‘‘ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஸைனப் (ரலி) ஆகியோரின் கூடாரங்கள்” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இதன் மூலம் நன்மையைத்தான் இவர்கள் நாடுகிறார்களா? நான் இஃதிகாஃப் இருக்கப்போவதில்லை” என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். (ரமளான்) நோன்பு முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.6 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Retiring to a Mosque for Remembrance of Allah (I'tikaf)
- Hadith Index
- #2045
- Book Index
- 20
Grades
- -