ஹதீஸ்கள்
#1958
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், ‘‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும்வரை காத்திருக்கலாமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு (இருள்) இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1958
- Book Index
- 65
Grades
- -