ஹதீஸ்கள்
#1956
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் (ஒருவரிடம்), ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட்டுமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார். பின்னர், ‘‘நீங்கள் இங்கிருந்து (கிழக்கி லிருந்து) இரவு (இருள்) முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்!” என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக்காட்டிக் கூறினார்கள்.33 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا عبد الواحد، حدثنا الشيباني، قال سمعت عبد الله بن ابي اوفى رضى الله عنه قال سرنا مع رسول الله صلى الله عليه وسلم وهو صايم، فلما غربت الشمس قال " انزل، فاجدح لنا ". قال يا رسول الله، لو امسيت. قال " انزل، فاجدح لنا ". قال يا رسول الله، ان عليك نهارا. قال " انزل، فاجدح لنا ". فنزل، فجدح، ثم قال " اذا رايتم الليل اقبل من ها هنا فقد افطر الصايم ". واشار باصبعه قبل المشرق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1956
- Book Index
- 63
Grades
- -
