ஹதீஸ்கள்
#1955
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் மக்களில் ஒருவரிடம், ‘‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட் டுமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அப்போதும் அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட்டுமே!” என்று சொன்னார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அப்போது அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘‘இரவு (இருள்) இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்” என்றார் கள்.32 அத்தியாயம் :
حدثنا اسحاق الواسطي، حدثنا خالد، عن الشيباني، عن عبد الله بن ابي اوفى رضى الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر، وهو صايم، فلما غربت الشمس قال لبعض القوم " يا فلان قم، فاجدح لنا ". فقال يا رسول الله، لو امسيت. قال " انزل، فاجدح لنا ". قال يا رسول الله فلو امسيت. قال " انزل، فاجدح لنا ". قال ان عليك نهارا. قال " انزل، فاجدح لنا ". فنزل فجدح لهم، فشرب النبي صلى الله عليه وسلم ثم قال " اذا رايتم الليل قد اقبل من ها هنا، فقد افطر الصايم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1955
- Book Index
- 62
Grades
- -
