ஹதீஸ்கள்
#1941
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ரமளானில்) ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘‘(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!” என்று கூறி னார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! சூரியன் (இன்னும் முழுமையாக மறையவில்லையே)!” என்றார். மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்றார்கள். அப்போதும் அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! சூரியன் (இன்னும் முழுமையாக மறையவில்லையே)!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி நபியவர்களுக்காக மாவைக் கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தமது கையால் (கிழக்கே) சுட்டிக்காட்டினார்கள் பிறகு, ‘‘இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு (இருள்) முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்” என்றார்கள்.26 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن ابي اسحاق الشيباني، سمع ابن ابي اوفى رضى الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فقال لرجل " انزل فاجدح لي ". قال يا رسول الله الشمس. قال " انزل فاجدح لي ". قال يا رسول الله الشمس. قال " انزل فاجدح لي ". فنزل، فجدح له، فشرب، ثم رمى بيده ها هنا، ثم قال " اذا رايتم الليل اقبل من ها هنا فقد افطر الصايم ". تابعه جرير وابو بكر بن عياش عن الشيباني عن ابن ابي اوفى قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1941
- Book Index
- 48
Grades
- -
