ஹதீஸ்கள்
#1935
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் கரிந்து போய்விட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்றார்கள். அவர், ‘‘ரமளானில் (நோன்பு நோற்றுக் கொண்டு பகலில்) நான் என் மனைவி யுடன் தாம்பத்திய உறவு கொண்டு விட்டேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ‘அரக்' எனப்படும் பெரிய கூடை (நிறைய பேரீச்சம் பழம்) கொண்டுவரப்பட்டது. ‘‘கரிந்துபோனவர் எங்கே?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘‘நான்தான்” என்று அவர் கூறினார். (அந்தப் பேரீச்சம் பழத்தை அந்த மனிதரிடம் கொடுத்து,) ‘‘இதைத் தர்மம் செய்வீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1935
- Book Index
- 42
Grades
- -