ஹதீஸ்கள்
#1929
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் போர்வைக்குள் இருக்கும் போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது; நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை எடுத்து (அணிந்து)கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள்; நான் ‘ஆம்' என்று கூறிவிட்டு, அவர் களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக்) குளிப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن هشام بن ابي عبد الله، حدثنا يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن زينب ابنة ام سلمة، عن امها رضى الله عنهما قالت بينما انا مع، رسول الله صلى الله عليه وسلم في الخميلة اذ حضت فانسللت، فاخذت ثياب حيضتي فقال " ما لك انفست ". قلت نعم. فدخلت معه في الخميلة، وكانت هي ورسول الله صلى الله عليه وسلم يغتسلان من اناء واحد، وكان يقبلها وهو صايم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1929
- Book Index
- 37
Grades
- -
