ஹதீஸ்கள்
#1926
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளியல் கடமையானவர்களாக ஃபஜ்ர் (வைகறை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்” என்று ஆயிஷா (ரலி), உம்மு சலமா (ரலி) ஆகியோர் அறிவித்ததாக அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பின் அல்ஹகமிடம் என் தந்தை அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது மர்வான் என் தந்தையிடம், ‘‘(பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைபவருக்கு நோன்பு கிடையாது என்று சொல்லிவரும்) அபூஹுரைராவுக்கு உறைக்கும் வண்ணம் இதை அவரிடம் நிச்சயமாக நீர் கூற வேண்டும் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்று கூறினார். இதை அப்துர் ரஹ்மான் அவர்கள் விரும்ப வில்லை. பின்னர் நாங்கள் ‘துல்ஹுலைஃபா' எனும் இடத்தில் (தற்செயலாக) சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அங்கு அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஒரு நிலம் இருந்தது; (நாங்கள் அங்கு சென்றபோது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கே இருந்தார்கள்;) அப்துர் ரஹ்மான் அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ‘‘நான் உங்களிடம் ஒரு செய்தியைக் கூறவிருக் கிறேன்; மர்வான் இது தொடர்பாக சத்தியம் செய்து வற்புறுத்தியிருக்காவிட்டால், இதை நான் உங்களிடம் கூறப் போவதில்லை” என்று கூறிவிட்டு, ஆயிஷா (ரலி), உம்மு சலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘இவ்வாறு (பெருந்துடக்கு உள்ளவருக்கு நோன்பு இல்லை என்று) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்தான் எனக்கு அறிவித்தார்; அவர்தான் (இதன் உண்மையை) நன்கறிந்தவர்” என்று பதிலளித்தார்கள். ‘‘(ஃபஜ்ர் நேரத்தில் குளியல் கடமையாக இருப்பவர்) நோன்பை விட்டுவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், முந்திய (இந்த நபிமொழியின் தொடக் கத்தில் உள்ள) செய்தியே பலமான அறிவிப்பாளர்தொடருடன் உள்ளதாகும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1926
- Book Index
- 34
Grades
- -