ஹதீஸ்கள்
#1915
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள் (ஆரம்ப நாட்களில்) நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, நோன்பு துறப்பதற்கு முன்பே உறங்கிவிட்டிருந்தால், அன்றைய இரவிலும் (தொடர்ந்து அடுத்த நாள்) பகலிலும் மாலைவரை எதையும் உண்ணமாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் பின் ஸிர்மா அல்அன்சாரி (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்; நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, ‘‘உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?” என்று கேட்டார்கள்; அவருடைய மனைவி, ‘‘இல்லை; எனினும் நான் சென்று உங்களுக்காக (உணவைத்) தேடி வருகிறேன்” என்றார். கைஸ் பின் ஸிர்மா (ரலி) அவர்கள் அன்றைய தினம் (கூலி) வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக் கம் மேலிட்டுவிட்டது. அவருடைய மனைவி வந்து அவரைக் கண்டபோது, ‘‘உங்களுக்கு நஷ்டம்தான்” என்றார். (மறுநாள்) நண்பகலானதும் கைஸ் (ரலி) அவர்கள் மூர்ச்சையுற்றார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது தான், ‘‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரோடு (நீங்கள்) தாம்பத்திய உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது” (2:187) என்ற வசனத்தொடர் அருளப்பெற்றது. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன், ‘‘கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” (2:187) எனும் தொடரும் அருளப்பெற்றது. அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال كان اصحاب محمد صلى الله عليه وسلم اذا كان الرجل صايما، فحضر الافطار، فنام قبل ان يفطر لم ياكل ليلته ولا يومه، حتى يمسي، وان قيس بن صرمة الانصاري كان صايما، فلما حضر الافطار اتى امراته، فقال لها اعندك طعام قالت لا ولكن انطلق، فاطلب لك. وكان يومه يعمل، فغلبته عيناه، فجاءته امراته، فلما راته قالت خيبة لك. فلما انتصف النهار غشي عليه، فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فنزلت هذه الاية {احل لكم ليلة الصيام الرفث الى نسايكم} ففرحوا بها فرحا شديدا، ونزلت {وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1915
- Book Index
- 25
Grades
- -
