ஹதீஸ்கள்
#1897
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய் தாரோ அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்!)› என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாய் இருந்தவர் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவார்; அறப்போர் புரிந்தவர் அறப்போருக்கான வாசல் வழியாக அழைக்கப்படுவார்; நோன்பாளியாய் இருந்தவர் ‘ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவார்; தர்மம் செய்தவர் தர்மத்திற்குரிய வாசல் வழியாக அழைக்கப்படுவார்” என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு (வேறு வாசல் வழியாகச் செல்ல வேண்டிய) அவசியம் இராது. (ஏனெனில், எந்த வழியிலாவது அவர் சொர்க்கம் சென்றுவிடுவார். இருந்தாலும்,) அந்த வாசல்கள் ஒவ்வொன்றிலிருந்தும் யாராவது அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، قال حدثني معن، قال حدثني مالك، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " من انفق زوجين في سبيل الله نودي من ابواب الجنة يا عبد الله، هذا خير. فمن كان من اهل الصلاة دعي من باب الصلاة، ومن كان من اهل الجهاد دعي من باب الجهاد، ومن كان من اهل الصيام دعي من باب الريان، ومن كان من اهل الصدقة دعي من باب الصدقة ". فقال ابو بكر رضى الله عنه بابي انت وامي يا رسول الله، ما على من دعي من تلك الابواب من ضرورة، فهل يدعى احد من تلك الابواب كلها قال " نعم. وارجو ان تكون منهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1897
- Book Index
- 7
Grades
- -
