ஹதீஸ்கள்
#1894
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! அறிவீனமாக நடந்துகொள்ள வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி' என்று இரு முறை கூறட்டும்! என் உயிர் எவன் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். (மேலும்) ‘‘எனக்காகவே நோன்பாளி தமது உணவையும் பானத்தையும் ஆசையையும் கைவிடுகிறார்; நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்” (என்று அல்லாஹ் கூறுகின்றான்). ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்கு களாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " الصيام جنة، فلا يرفث ولا يجهل، وان امرو قاتله او شاتمه فليقل اني صايم. مرتين، والذي نفسي بيده لخلوف فم الصايم اطيب عند الله تعالى من ريح المسك، يترك طعامه وشرابه وشهوته من اجلي، الصيام لي، وانا اجزي به، والحسنة بعشر امثالها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1894
- Book Index
- 4
Grades
- -
