ஹதீஸ்கள்
#1892
ஸஹீஹ் அல்-புகாரீ - Fasting
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளை யிட்டார்கள். ரமளான் நோன்பு கடமை யாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பு (கட்டாயம் என்பது) கைவிடப்பட்டது. ‘‘தம்முடைய வேறு நோன்பு (ஏதாவது) அந்நாளில் தற்செயலாக அமைந்தால் தவிர, இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்க மாட்டார்கள்” என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا اسماعيل، عن ايوب، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال صام النبي صلى الله عليه وسلم عاشوراء، وامر بصيامه. فلما فرض رمضان ترك. وكان عبد الله لا يصومه، الا ان يوافق صومه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fasting
- Hadith Index
- #1892
- Book Index
- 2
Grades
- -
