ஹதீஸ்கள்
#1869
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of Madinah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “மதீனாவின் இரு கருங்கல் மலை களுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவால் (என் வாயிலாக) புனிதமாக்கப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மதீனாவின் மேட்டுப் பகுதியில் வசித்த) பனூ ஹாரிஸா குலத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று, “பனூ ஹாரிஸா குலத்தாரே! நீங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு வெளியே இருப்பதாகவே கருதுகிறேன்” என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்துவிட்டு, “இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال حدثني اخي، عن سليمان، عن عبيد الله، عن سعيد المقبري، عن ابي هريرة رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم قال " حرم ما بين لابتى المدينة على لساني ". قال واتى النبي صلى الله عليه وسلم بني حارثة فقال " اراكم يا بني حارثة قد خرجتم من الحرم ". ثم التفت، فقال " بل انتم فيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of Madinah
- Hadith Index
- #1869
- Book Index
- 3
Grades
- -
