ஹதீஸ்கள்
#1868
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of Madinah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளை யிட்டார்கள்; “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! (உங்கள் தோட்டத்தை) எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்” என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தார் “இதற்கான விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணைவைப் பாளர்களின் சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ் வாறே அவை தோண்டப்பட்டன. அவர் களின் கட்டளைப்படியே இடிபாடுகள் (அகற்றப்பட்டு) சமப்படுத்தப்பட்டன; பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன; பள்ளிவாசலின் கிப்லா திசையில், (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித் தோழர்கள்) நட்டனர். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of Madinah
- Hadith Index
- #1868
- Book Index
- 2
Grades
- -