ஹதீஸ்கள்
#1866
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் சகோதரி கஅபாவரை (காலணி அணியாமல்) நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு எனக்கு உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக்கொள்ளட்டும்” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் அபுல்கைர் (ரஹ்) அவர்கள், அன்னாரைவிட்டு இணைபிரியாதவராக (நேரடியாக நபிமொழிகளைக் கேட்பவராக) இருந்தார். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام بن يوسف، ان ابن جريج، اخبرهم قال اخبرني سعيد بن ابي ايوب، ان يزيد بن ابي حبيب، اخبره ان ابا الخير حدثه عن عقبة بن عامر، قال نذرت اختي ان تمشي، الى بيت الله، وامرتني ان استفتي لها النبي صلى الله عليه وسلم فاستفتيته، فقال عليه السلام " لتمش ولتركب ". قال وكان ابو الخير لا يفارق عقبة. قال ابو عبد الله حدثنا ابو عاصم عن ابن جريج عن يحيى بن ايوب عن يزيد عن ابي الخير عن عقبة فذكر الحديث
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1866
- Book Index
- 46
Grades
- -
