ஹதீஸ்கள்
#1833
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நிச்சயமாக அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போர் செய்வது) அனுமதிக்கப்படவில்லை; எனக்குப்பின் எவருக்கும் அனுமதிக்கப் படாது; எனக்குக்கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது. எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக் கூடாது; இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர மற்றவர்கள் எடுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அடக்கக் குழிகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகின்ற ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இத்கிர் எனும் புல்லைத் தவிர!” என்று கூறினார்கள். “வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது என்பதன் பொருள் உமக்குத் தெரியுமா? நிழலில் படுத்திருக்கும் பிரா ணியை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவதுதான்” என்று அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا عبد الوهاب، حدثنا خالد، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم قال " ان الله حرم مكة، فلم تحل لاحد قبلي، ولا تحل لاحد بعدي، وانما احلت لي ساعة من نهار، لا يختلى خلاها، ولا يعضد شجرها، ولا ينفر صيدها، ولا تلتقط لقطتها الا لمعرف ". وقال العباس يا رسول الله. الا الاذخر لصاغتنا وقبورنا. فقال " الا الاذخر ". وعن خالد عن عكرمة قال هل تدري ما لا ينفر صيدها هو ان ينحيه من الظل، ينزل مكانه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1833
- Book Index
- 13
Grades
- -
