ஹதீஸ்கள்
#1822
ஸஹீஹ் அல்-புகாரீ - Penalty of Hunting while on Pilgrimage
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா (ஒப்பந்தம் நடந்த ஹிஜ்ரீ ஆறாவது) ஆண்டில் நபி (ஸல்) அவர் களுடன் நாங்கள் சென்றோம். அவர் களின் தோழர்கள் (உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டியிருந்தனர். ‘ஃகைகா’ எனும் இடத்தில் எதிரிகள் இருப்பதாக எங்களுக் குத் தகவல் கிடைத்தது. நாங்கள் அவர்களை நோக்கிச் சென்றோம். (வழியில்) ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு என் தோழர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கலாயினர். நான் கூர்ந்து நோக்கியதில் அதைப் பார்த்துவிட்டேன். அதன் மீது குதிரையை ஏவி, ஈட்டியால் அதைக் குத்திவிட்டேன். (அதைத் தாக்குவதற்கு) என் தோழர்களிடம் நான் உதவி கோரியபோது, அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால்) எனக்கு உதவ மறுத்துவிட்டார்கள். பிறகு அதை நாங்கள் உண்டோம். பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோம் என்று அஞ்சி, என் குதிரையை ஒரு முறை விரைவாகவும் இன்னொரு முறை மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் பனூ கிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எங்கே விட்டுவந்தீர்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர்களை ‘தஅஹன்’ எனும் நீர்நிலை அருகே விட்டுவந்தேன். அப்போது அவர்கள் ‘சுக்யா’ எனும் சிற்றூரில் ஓய்வெடுக்கப் போய்க்கொண்டிருந்தார்கள்” என்று கூறி னார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சென்றடைந்து, “அல்லாஹ் வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்க ளுக்கு முகமன் (சலாம்) கூறி அனுப்பி னார்கள்; உங்களிடமிருந்து தங்களை எதிரிகள் பிரித்துவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்; எனவே, அவர்களுக்காகக் காத்திருங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒரு காட்டுக் கழுதையை வேட்டையாடினோம்; எங்களிடம் (அதில்) சிறிதளவு எஞ்சியுள்ளது” என்று கூறி னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த தம் தோழர்களிடம் “உண்ணுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن الربيع، حدثنا علي بن المبارك، عن يحيى، عن عبد الله بن ابي قتادة، ان اباه، حدثه قال انطلقنا مع النبي صلى الله عليه وسلم عام الحديبية فاحرم اصحابه، ولم احرم، فانبينا بعدو بغيقة فتوجهنا نحوهم، فبصر اصحابي بحمار وحش، فجعل بعضهم يضحك الى بعض، فنظرت فرايته فحملت عليه الفرس، فطعنته، فاثبته، فاستعنتهم، فابوا ان يعينوني، فاكلنا منه، ثم لحقت برسول الله صلى الله عليه وسلم وخشينا ان نقتطع، ارفع فرسي شاوا، واسير عليه شاوا، فلقيت رجلا من بني غفار في جوف الليل فقلت اين تركت رسول الله صلى الله عليه وسلم فقال تركته بتعهن وهو قايل السقيا. فلحقت برسول الله صلى الله عليه وسلم حتى اتيته فقلت يا رسول الله، ان اصحابك ارسلوا يقرءون عليك السلام ورحمة الله وبركاته، وانهم قد خشوا ان يقتطعهم العدو دونك، فانظرهم، ففعل فقلت يا رسول الله، انا اصدنا حمار وحش، وان عندنا فاضلة. فقال رسول الله صلى الله عليه وسلم لاصحابه " كلوا ". وهم محرمون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Penalty of Hunting while on Pilgrimage
- Hadith Index
- #1822
- Book Index
- 2
Grades
- -
