ஹதீஸ்கள்
#1815
ஸஹீஹ் அல்-புகாரீ - Pilgrims Prevented from Completing the Pilgrimage
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் இஹ்ராம் கட்டியிருந்தபோது) ஹுதைபியாவில் என்னருகில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது (தலை யிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு “உமது தலையை மழித்துக் கொள்வீராக” என்றார்கள். என் தொடர் பாகவே, “உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ...” (2:196) எனும் வசனம் அருளப்பெற்றது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ‘ஸாஉ’ தானியத்தை ஆறு ஏழைகளுக்குத் தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததைப் பலியிடு வீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا سيف، قال حدثني مجاهد، قال سمعت عبد الرحمن بن ابي ليلى، ان كعب بن عجرة، حدثه قال وقف على رسول الله صلى الله عليه وسلم بالحديبية، وراسي يتهافت قملا فقال " يوذيك هوامك ". قلت نعم. قال " فاحلق راسك او قال احلق ". قال في نزلت هذه الاية {فمن كان منكم مريضا او به اذى من راسه} الى اخرها. فقال النبي صلى الله عليه وسلم " صم ثلاثة ايام، او تصدق بفرق بين ستة، او انسك بما تيسر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Pilgrims Prevented from Completing the Pilgrimage
- Hadith Index
- #1815
- Book Index
- 10
Grades
- -
