ஹதீஸ்கள்
#1812
ஸஹீஹ் அல்-புகாரீ - Pilgrims Prevented from Completing the Pilgrimage
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்கள்) சாலிம், அப்துல்லாஹ் (ரஹ்) ஆகியோர் (குழப்பமான சூழ்நிலையில் ஹஜ்ஜுக்குச் செல்வது குறித்துப்) பேசினார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களு டன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டோம்; கஅபாவிற்குச் செல்ல விடாமல் குறைஷி இறைமறுப்பாளர்கள் தடுத்துவிட்டார்கள்; ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள் தம் ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து)விட்டுத் தமது தலையை மழித்துக்கொண்டார்கள். (இஹ்ராமி லிருந்து விடுபட்டுவிட்டார்கள்)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الرحيم، اخبرنا ابو بدر، شجاع بن الوليد عن عمر بن محمد العمري، قال وحدث نافع، ان عبد الله، وسالما، كلما عبد الله بن عمر رضى الله عنهما فقال خرجنا مع النبي صلى الله عليه وسلم معتمرين، فحال كفار قريش دون البيت، فنحر رسول الله صلى الله عليه وسلم بدنه، وحلق راسه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Pilgrims Prevented from Completing the Pilgrimage
- Hadith Index
- #1812
- Book Index
- 7
Grades
- -
