ஹதீஸ்கள்
#1790
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சிறு வயதுடையவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களின் துணைவியார் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நிச்சயமாக, ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்ற மன்று” (2:158) என உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்; எனவே, “அவ் விரண்டையும் சுற்றாமல் இருப்பது குற்ற மாகாது என்றே நான் கருதுகிறேன்” என்று கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அவ்வாறில்லை; நீ கருதுவதைப் போன்றி ருந்தால் ‘அவ்விரண்டையும் தவாஃப் செய்யாமலிருப்பதில் குற்றமில்லை’ என்று அவ்வசனம் அமைந்திருக்க வேண்டும்; மேலும், இந்த வசனம் அன்சாரிகள் தொடர்பாக அருளப்பட்டதாகும். (அறியா மைக் காலத்தில்) அவர்கள் ‘குதைத்’ என்ற இடத்தின் அருகில் ‘மனாத்’ என்ற சிலைக் காக இஹ்ராம் கட்டிவந்தார்கள். அதனால் (இஸ்லாத்தை ஏற்றபின்) ஸஃபா-மர்வாவுக் கிடையே சுற்றிவருவதைக் குற்றமாக அவர்கள் கருதினர். எனவே, அவர்கள் இஸ்லாத்திற்கு வந்ததும் அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டனர்; அப்போதுதான் இந்த வசனத்தை (2:158) உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான்” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு அறிவிப்புகளில், “ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி வராதவரின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமைப்படுத்தவில்லை” என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1790
- Book Index
- 17
Grades
- -