ஹதீஸ்கள்
#1782
ஸஹீஹ் அல்-புகாரீ - `Umrah (Minor pilgrimage)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களில் ஒருவரிடம், -“இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; நான் அதை மறந்துவிட்டேன்” என அவரிடமிருந்து அறிவிக்கும் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்- “நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?” எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “எங்களிடம் இருந்த நீர் இறைப்பதற்கான (இரு ஒட்டகங்களில்) ஓர் ஒட்டகத்தில் இன்னா ரின் தந்தையும் அவருடைய மகனும் (என் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு) ஏறிச் சென்றுவிட்டனர்; மற்றோர் ஒட்டகத்தை அவர் விட்டுச்சென்றுள்ளார். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக்கொண்டிருக்கி றோம்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்” என்றோ, அல்லது அதைப் போன்றோ கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن ابن جريج، عن عطاء، قال سمعت ابن عباس رضى الله عنهما يخبرنا يقول قال رسول الله صلى الله عليه وسلم لامراة من الانصار سماها ابن عباس، فنسيت اسمها " ما منعك ان تحجي معنا ". قالت كان لنا ناضح فركبه ابو فلان وابنه لزوجها وابنها وترك ناضحا ننضح عليه قال " فاذا كان رمضان اعتمري فيه فان عمرة في رمضان حجة ". او نحوا مما قال
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- `Umrah (Minor pilgrimage)
- Hadith Index
- #1782
- Book Index
- 9
Grades
- -
