ஹதீஸ்கள்
#1746
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “நான் (நஹ்ருடைய நாட்கள் அல்லாத நாட்களில்) எப்போது (ஷைத்தானுக்கு) கல் எறிய வேண்டும்?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “உம்முடைய (ஹஜ்) தலைவர் எறியும்போது நீரும் எறியும்!” என்றார்கள். நான் மீண்டும் அதே கேள்வி கேட்டபோது, “நாங்கள் சூரியன் உச்சி சாயும்வரை காத்திருப்போம்; பிறகு கல்லெறிவோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا مسعر، عن وبرة، قال سالت ابن عمر رضى الله عنهما متى ارمي الجمار قال اذا رمى امامك فارمه. فاعدت عليه المسالة، قال كنا نتحين، فاذا زالت الشمس رمينا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1746
- Book Index
- 224
Grades
- -
