ஹதீஸ்கள்
#1715
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தின் போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். துல்ஹுலைஃபா வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழு தார்கள். இரவில் அங்கேயே தங்கிவிட்டு, விடிந்ததும் சுப்ஹு தொழுதார்கள். பிறகு தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறி ‘அல்பைதாஉ’ எனுமிடத்தை அடைந்த போது ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1715
- Book Index
- 193
Grades
- -