ஹதீஸ்கள்
#1691
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது உம்ரா வுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள்.53 (மதீனாவாசிகளின் எல்லையான) துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச்சென்று குர்பானியும் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர் களாக இருந்தனர். எனவே, குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தனர். வேறுசிலரோ, குர்பானி கொடுப்பவர்களாக இல்லை. (ஆகவே, அவர்கள் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வரவில்லை). நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மக்களிடம், “உங்களில் யார் குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்துள் ளாரோ அவர் தமது ஹஜ்ஜை நிறை வேற்றாத வரை இஹ்ராமிருந்து விடுபடக் கூடாது; யார் குர்பானிப் பிராணியைக் கொண்டுவரவில்லையோ அவர் இறை யில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்து விட்டு, தலைமுடியைக் குறைத்துக் கொண்டு, இஹ்ராமைக் களைந்துவிட்டு, பிறகு ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்! யாருக்கு குர்பானிப் பிராணி கிடைக்க வில்லையோ அவர், ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு) தமது வீடு திரும்பிய தும் ஏழு நோன்புகளும் நோற்கட்டும்!” என்று கூறினார்கள். பிறகு மக்காவுக்கு நபி (ஸல்) அவர்கள் வந்ததும், (இறையில்லம் கஅபாவை ஏழு முறை) சுற்றிவந்துவிட்டு முதல் வேலையாக (கஅபாவின்) மூலையை (ஒட்டி பதிக்கப்பெற்றுள்ள ஹஜருல் அஸ்வதை)த் தொட்டு முத்தமிட்டார்கள். (ஏழில்) மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடியும் நான்கு சுற்றுகள் (சாதாரணமாக) நடந்தும் தவாஃப் செய்தார்கள். தவாஃப் செய்து முடித்ததும், மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். சலாம் கொடுத்ததும் ஸஃபாவுக்கு வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழு தடவை ‘சயீ’ செய்தார்கள். பிறகு, தமது ஹஜ்ஜை முடிக்கும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் தமது குர்பானிப் பிராணியைப் பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வந்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட் டார்கள். மக்களில் குர்பானி பிராணியைக் கொண்டுவந்து அறுத்துப் பலியிட்டவர் களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1691
- Book Index
- 170
Grades
- -