ஹதீஸ்கள்
#1660
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மன்னர்) அப்துல் மலிக் (பின் மர்வான்), ஹஜ்ஜின்போது இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு மாற்றமாக நடந்துகொள்ள வேண்டாம் என (அமீர்) ஹஜ்ஜாஜுக்குக் கடிதம் எழுதினார். அரஃபா நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று (புறப்படுமாறு) சப்தமிட்டார்கள். உடனே ஹஜ்ஜாஜ் மஞ்சள் சாயம் பூசப்பட்ட பெரிய கீழங்கியுடன் வெளியே வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே (இப்னு உமரே)! என்ன விஷயம்?” எனக் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் இங்கிருந்து புறப்பட வேண்டியதுதான்” என்றார்கள். ஹஜ்ஜாஜ் “இந்த நேரத்திலா?” எனக் கேட்டதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். ஹஜ்ஜாஜ் “தலைக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, இதோ புறப்படுகின் றேன், அதுவரை பொறுங்கள்” எனக் கூறினார். இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜாஜ் புறப்படும்வரை (தமது வாகனத்தைவிட்டு) இறங்கி நின்றார்கள். ஹஜ்ஜாஜ், எனக்கும் என் தந்தை (இப்னு உமரு)க்குமிடையே நடந்து கொண்டிருந்தபோது நான் ஹஜ்ஜாஜிடம், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் உரையை (குத்பா) சுருக்கி (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும்” என்றேன். உடனே அவர் அப்துல்லாஹ் பின் உமர் அவர்களைப் பார்க்கலானார். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அதைக் கண்டபோது, “சாலிம் சொன்னது உண்மைதான்” என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1660
- Book Index
- 141
Grades
- -