ஹதீஸ்கள்
#1608
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
அபுஷ்ஷஅஸா ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் தவிர்க்க முடியும்? முஆவியா (ரலி) அவர்கள் (கஅபாவின்) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள். அப்போது முஆவியா (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள) இந்த இரு மூலைகளை முத்தமிடக் கூடாது” என்றார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “இந்த ஆலயத்தில் (முத்தமிடத்) தடுக்கப்பட்ட பகுதி எதுவுமில்லை” என்றார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், எல்லா மூலைகளையும் முத்த மிடுவார்கள். அத்தியாயம் :
وقال محمد بن بكر اخبرنا ابن جريج، اخبرني عمرو بن دينار، عن ابي الشعثاء، انه قال ومن يتقي شييا من البيت، وكان معاوية يستلم الاركان، فقال له ابن عباس رضى الله عنهما انه لا يستلم هذان الركنان. فقال ليس شىء من البيت مهجورا، وكان ابن الزبير رضى الله عنهما يستلمهن كلهن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1608
- Book Index
- 94
Grades
- -
