ஹதீஸ்கள்
#1588
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், (மக்கா பயணத்தின்போது), “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மக்காவில் எங்கு தங்குவீர்கள்? அங்குள்ள உங்கள் வீட்டிலா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “(அபூதாலிபின் புதல்வர்) அகீல், தங்கும் விடுதிகள், அல்லது வீடுகள் எதையேனும் (நமக்கு) விட்டுவைத்துள் ளாரா, என்ன?” எனக் கேட்டார்கள். அபூதாலிபின் சொத்துகளுக்கு (அவருடைய மக்களில்) அகீலும் தாலிபும் வாரிசானார்கள். ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) ஆகிய இருவரும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்கு அவர்களால்) வாரிசாக முடியவில்லை. (அபூதாலிப் இறந்தபோது) அகீலும் தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந் தனர். “இறைமறுப்பாளருக்கு இறை நம்பிக்கையாளர் வாரிசாகமாட்டார்” என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “இறைநம்பிக்கை கொண்டு, (மார்க்கத்துக்காகப்) புலம்பெயர்ந்து சென்று, தம் செல்வங்களாலும் உயிர்களாலும் இறைவழியில் போரிட்டவர்களும், (அவர்களுக்கு) அடைக்கலம் அளித்து உதவி புரிந்தவர்களும்தான் சிலருக்குச் சிலர் உற்ற நண்பர்கள் ஆவர்” (8:72) என அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனத்திற்கு, இறைநம்பிக்கையாளர்களே சிலருக்குச் சிலர் வாரிசாவார்கள் என (முற்கால) அறிஞர்கள் விளக்கம் அளித்துவந்தனர். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1588
- Book Index
- 74
Grades
- -