ஹதீஸ்கள்
#1582
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கஅபா (புதுப்பித்துக்) கட்டப்பட்டபோது (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களும் (அவர்களின் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து எடுத்துச் சென்றார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (கல் சுமப்பதற்கு வசதியாக), “உமது வேட்டியை அவிழ்த்துத் தோளில் வைத்துக்கொள்” எனக் கூறினார்கள். (நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள்) உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களின் கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி இருந்தன. (அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி) “எனது ஆடையை எனக்குக் கொடுங்கள்” என்றார்கள். (ஆடையை எடுத்துக் கொடுத்தவுடன்) அதை இறுக்கமாகக் கட்டிக்கொண்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1582
- Book Index
- 68
Grades
- -