ஹதீஸ்கள்
#1493
ஸஹீஹ் அல்-புகாரீ - Obligatory Charity Tax (Zakat)
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பரீரா எனும் (அடிமைப்) பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினேன். ஆனால், அப்பெண்ணின் உரிமையாளர்கள், (பரீராவை நாங்கள் உங்களுக்கு விற்றுவிட்டாலும்) அவரின் ‘வாரிசுரிமை’ எங்களுக்கு வேண்டும் என்று நிபந்தனையிட விரும்பினார்கள். நான் இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ பரீராவை விலைக்கு வாங்கி (விடுதலை செய்து)விடு; வாரிசுரிமை விடுதலை செய்பவருக்குத்தான்” என்றார்கள்.21 பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது நான், “இது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப் பட்ட பொருள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது பரீராவுக்குத் தர்ம மாகும்; நமக்கு அன்பளிப்பாகும்” என் றார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا الحكم، عن ابراهيم، عن الاسود، عن عايشة رضى الله عنها انها ارادت ان تشتري بريرة للعتق، واراد مواليها ان يشترطوا ولاءها، فذكرت عايشة للنبي صلى الله عليه وسلم فقال لها النبي صلى الله عليه وسلم " اشتريها، فانما الولاء لمن اعتق ". قالت واتي النبي صلى الله عليه وسلم بلحم فقلت هذا ما تصدق به على بريرة فقال " هو لها صدقة، ولنا هدية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Obligatory Charity Tax (Zakat)
- Hadith Index
- #1493
- Book Index
- 93
Grades
- -
