ஹதீஸ்கள்
#1469
ஸஹீஹ் அல்-புகாரீ - Obligatory Charity Tax (Zakat)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உணவும் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள்; நபி (ஸல்) அவர்கள் அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது தீர்ந்துபோயிற்று. அப்போது “என்னிடம் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் ஒருபோதும் சேமித்துவைக்கப் போவதில்லை. ஆயினும், யார் சுய மரியாதையோடு நடத்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச்செய்வான்; யார் பிறரிடம் தேவை யற்றவராக இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவுடையவராக ஆக்கு கிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறாரோ அவரை அல்லாஹ் பொறுமையாளராக ஆக்குவான்; மேலும், பொறுமையைவிடச் சிறந்த, விசாலமான தோர் அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படவில்லை” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن عطاء بن يزيد الليثي، عن ابي سعيد الخدري رضى الله عنه ان ناسا من الانصار سالوا رسول الله صلى الله عليه وسلم فاعطاهم، ثم سالوه فاعطاهم، حتى نفد ما عنده فقال " ما يكون عندي من خير فلن ادخره عنكم، ومن يستعفف يعفه الله، ومن يستغن يغنه الله، ومن يتصبر يصبره الله، وما اعطي احد عطاء خيرا واوسع من الصبر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Obligatory Charity Tax (Zakat)
- Hadith Index
- #1469
- Book Index
- 71
Grades
- -
